India Post Recruitment 2022: 


இந்திய அஞ்சல் துறையில் (India Post Office) காலியாக உள்ள 60,544 Postman, Mail Guard பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தேர்தெடுக்கப்படும் நபர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள அஞ்சலகங்களில் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்: 


Postman 
Mail Guard


மொத்த பணியிடங்கள்:


Postman -59,099
Mail Guard - 1,445


மொத்தம்- 60,544


கல்வித் தகுதி:


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் தங்களது மாநில மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 


இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.


ஊதிய விவரம்:


லெவல்-3 இன் படி (Level-3 in the pay matrix) ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


தேவையான கல்வி ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx -யை தொடர்பு கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2022


முக்கிய விவரங்களின் முழு விவரத்திற்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_15112022_RR_Draft_Eng.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 


இந்திய அஞ்சல சேமிப்பு திட்டத்தின் பலன்கள்:


ஒரு மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையங்களில் சிறந்தவகையில் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இதனால் மக்கள் தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். 


அதிக வட்டி :

 
















சமீபத்தில் அஞ்சலக தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு மற்றும் தபால் அலுவலக MIS கணக்கு போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான கட்டணங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே 6.6 % ஆக இருப்பினும் இது மற்ற வங்கிகளில் அளிக்கப்படும் FD வட்டி விகிதத்தை விடவும் அதிகம் தான்.


நிலையான வருமானம்:
முதலீட்டாளர்கள் இந்த அஞ்சலக தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு மூலம் முதலீடு செய்யும் போது அதிக அளவிலான வருமானத்தை பெற முடியும். முதலீடு செய்யும் போது இருந்த வட்டி வீகிதத்தின்படி நிலையான வருமானத்தை பெறமுடியும். பிற்காலத்தில் ஏற்படும் வட்டி விகிதத்தின் மாற்றங்கள் குறித்து கவலை பட தேவையில்லை.  


 





















மேலும் வாசிக்க..


Post Office Ponmagan Scheme: ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் - முழு விவரம்