இந்திய கடற்படையில் காலியாக உள்ள 1531 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


நாட்டின் கடல் எல்லைகளைக் காப்பது தான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்திய அரசு தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப்பார்வையிடுதல். பேரிடர் நிவாரணம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இத்துறையின் கீழ் பணியாற்றுவதற்காக  தற்போது 1531 டிரான்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.



இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்: 1531


பொதுப்பிரிவு – 697


EWS – 141


OBC – 385


SC- 215


ST - 93


கல்வித்தகுதி:


இந்திய கடற்படைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கில அறிவு பெற்றிருப்பதோடு சம்பந்தபட்ட வர்த்தக்கத்தில் தொழிற்பயிற்சி முடித்திருக்க வேண்டும்.


இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் பொருத்தமான தொழில்நுட்பக்கிளையில் இரண்டு ஆண்டுகள் வழக்கமான சேவையுடன் மெக்கானிக் அல்லது அதற்கு சமமான பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


இந்திய கடற்படைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், முதலில், https://www.joinindiannavy.gov.in/# என்ற இணையதளப்பக்கத்திற்குள் செல்ல  வேண்டும்.


பின்னர் முகப்புப்பக்கத்தில் உள்ள joint Navy என்பதைக் கிளிக் செய்யவும்.


Ways to join என்ற இணைப்பைக்கிளிக் செய்ய வேண்டும். இதில் civilian என்பதை கிளிக் செய்து Tradesman skilled என்பதை கிளிக் வெய்ய வேண்டும்.


இதனையடுத்து வரும் பக்கத்தில், Register tab or login Using என்பதைக்கிளிக் செய்ய வேண்டும்.


பின்னர் நீங்கள் பதிவு செய்துள்ள ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.


இப்போது அப்பக்கத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பத்தில் நிரப்புவதற்குத் தேவையான புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றியவுடன் இறுதியில் submit என்பதைக் கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மார்ச் 31, 2022.


சம்பள விபரம்:


தேர்வாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு பே மேட்ரிக்ஸ் லெவல் 2ன் கீழ் மாதம் ரூபாய் 19, 900 முதல் ரூ.63, 200 என நிர்ணயம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.joinindiannavy.gov.in/en# என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.