புதுச்சேரி : புதுச்சேரியில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பிசி ஏஜண்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Continues below advertisement

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி முகவர் பணி

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ (IPPB) சார்பில், புதுச்சேரியில் வங்கித் தொடர்பாளர் (BC Agent) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையத்தின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நல்ல வரவேற்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகளைத் திறம்பட வழங்கி வருகிறது. குறிப்பாக விபத்துக் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் கடன் உதவிகள் வழங்கும் பணிகளுக்கு மக்களிடையே பெருமளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Continues below advertisement

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

புதுச்சேரி மக்களுக்கு அஞ்சல் வங்கியின் சேவைகள் எந்த நேரத்திலும் தடையின்றித் தாராளமாகக் கிடைக்கும் வகையில், வங்கித் தொடர்பாளர்களை (BC Agents) தேர்வு செய்து சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு பின்வருவோர் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்:

  • கணினி சேவை மையம் (CSC) மற்றும் பொது சேவை மையங்களை இயக்குபவர்கள்
  • உணவகங்கள் (ஹோட்டல்கள்) நடத்துபவர்கள்
  • ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்
  • காய்கறி மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்கள்
  • சிறு சேமிப்புத் திட்ட முகவர்கள்

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு விலக்கு

பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், மகளிர் சுயஉதவிக் குழுவில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாகச் செலுத்த வேண்டிய ₹5,000 வைப்புத் தொகையிலிருந்து (Deposit) மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

தகுதியும், பணிகளின் தன்மையும்

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 75 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

செய்ய வேண்டிய பணிகள்:

வங்கிக் கணக்கு புதிதாகத் தொடங்கித் தருதல், பண வைப்பு (Deposit) மற்றும் பணம் எடுத்துத் தருதல் (Withdrawal), விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு செய்தல், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் வழங்குதல் ஆகியவை அடங்கும். மேலும் தனிநபர் கடன், வீடு, சொத்து மற்றும் வணிகக் கடன்களைப் பெற்றுத் தருவதும் இந்த முகவர்களின் வேலை வரம்பிற்குள் வரும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணிக்கான விண்ணப்ப விநியோகம் இன்று (ஜூலை 27) முதல் தொடங்குகிறது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31-ஆம் தேதி.

கூடுதல் தகவல்களுக்கு: மேல்விவரங்களை அறிய 9952053573 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.