மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (29/10/2023) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


பணி விவரம்



  • ஈ.சி.ஜி. டெக்னீசியன்

  • ஜூனியர் ரேடியோகிராஃபர்

  • ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்

  • Pharmacist (Allopathic)

  • Pharmacist (Ayurveda)

  • Radiographer 


மொத்த பணியிடங்கள் - 56


கல்வித் தகுதி:



  • ஈ.சி.ஜி.  பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். AICTE யின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.

  • ஜூனியர் ரேடியாலஜி படிப்பிற்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ரேடியோகிராபியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

  • உதவியாளர் பணிக்கு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, ஓ.டி. துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • Pharmacist படிப்பிற்கு  Pharmacy in Ayurveda துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

  • இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாவது மற்றும் 12-வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். 


பட்டியலின / பழங்குயின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை


https://www.esic.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023


முகவரி


ESI Corporation, Panchadeep Bhawan, 
143, Sterling Road, Nungambakkam,
 Chennai, Tamil Nadu – 600034.


வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை காண https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி தேதியாகும்.


பணி விவரம்:


உதவி மின் கம்பியாளர் 


கல்வித் தகுதி


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு Pay Matric level 18-ன் படி ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். 


இதர நிபந்தனைகள்


இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:


இணை ஆணையர்/செயல் அலுவலர்,


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,


திருச்செந்தூர் - 628215,


தூத்துக்குடி மாவட்டம்.


தொலைப்பேசி எண் : 04639-242221.


https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 மாலை 05.45 மணி வரை


இது குறித்த முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/19vZrd03fzGM3bIzQWyI3iyD4H4CLePcs/view - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.