Job Alert: ஈரோட்டில் ஐ.டி. துறையில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre Recruitment) திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்:

  • வழக்கு பணியாளர் (Case Worker)
  • ஐ.டி. அதிகாரி

ஒருங்கிணைந்த சேவை மையம்

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பல்வேறு மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஈரோட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ’Social Work, Counselling Psycology or Development Management ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி அறிவியல் படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • இந்த இரண்டு பணியிடத்திற்கும் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

  • வழக்கு அலுவலர்கள் - ரூ.18,000
  • தகவல் தொழில்நுட்ப பணியாளர் - ரூ.20,000/-

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூலநல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்,
6-வது தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஈரோடு - 638 011

தொலைபேசி எண் - 0424 - 2261495

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2024/06/2024061924.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து பணியிட எண்ணிக்கை, வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2024/06/2024061924.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 28.06.2024 மாலை 5 மணிக்குள்


 

Continues below advertisement