தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  


பணி விவரம்:


அலுவலக உதவியாளர்


இரவுக் காவலர்


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


 இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதர பிரிவிவர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பட்டியலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-


இரவுக் காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:



  •  விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

  • இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

  •  விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

  •  சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 


அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:


ஆணையாளர்,


ஊராட்சி ஒன்றியம்.,


 தருமபுரி


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:  0512.2023 மாலை 05.45 வரை 


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023112185-1.pdfhttps://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023112196-1.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


சென்னை கணித நிறுவனத்தில் வேலை


சென்னை கணித நிறுவனத்தில் (The Institute of Mathematical Sciences) காலியாக உள்ள Deputy Controller Of Accounts பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


Deputy Controller Of Accounts 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


நிதி மேலாண்மை, திட்டமிடுவது, நிர்வாக திட்டமிடல், நிதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.


குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.  எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.


இந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


ஊதிய விவரம்


7-வது மெட்ரிக்ஸ் லெவல் -11-ன் படி மாத ஊதியம் வழங்கப்படும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தெரிவு செய்யும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்ப கட்டணமாக 500-ரூபாய் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.imsc.res.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணைதள முகவரியின் வேலைவாய்ப்பு பக்கத்தில் ‘Recruitment of Deputy Controller of Accounts' என்றிருக்கும். அதை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


https://naukri.imsc.res.in/dca/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணபிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2023 


இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.imsc.res.in/~office/jobs/imsc-dca-14nov2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.