தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


அலுவலக உதவியாளர்


இரவு காவலர்


ஈப்பு ஓட்டுநர்


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


 இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஈப்பு ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணியிடம் - காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி,அரூர்


வயது வரம்பு:


இதர பிரிவினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்



  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-

  • இரவுக் காவலர்- ரூ.15,700 - ரூ.50,000/-

  • ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500/- (13,500 -62,000)


1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.


2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.


4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.


5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்


அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:


மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம்,
தருமபுரி - 636 705


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.01.2024 மாலை 05.45 வரை 


காரிமங்கலம் - விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.02.2024


இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • ஓட்டுநர்

  • அலுவலக உதவியாளர்

  • இரவுக் காவலர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக படிக்க எழுத தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-


அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-


இரவு காவலர் -  ரூ.15,700 - ரூ.50,000/-


விண்ணப்பிக்கும் முறை


இதற்கு விண்ணப்பிக்க ஆவணங்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை உன்றுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


இணை ஆணையர்,


இந்து சமய அறநிலையத்துறை


35/1A, மேலரத வீதி, தூத்துக்குடி- 628 002


வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தெரிவு செய்யப்படும் முறை உள்ளிட்ட மேலதிக தகவலுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.01.2024 மாலை 5 மணி வரை