வேலைவாய்ப்பு- பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்
வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC- Chennai A). பெண்கள் உதவி மையம் (181) போன்ற சேவை மையங்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயன்பெறுவதாகும். அந்த வகையில் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணியிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் வேலை
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC- Chennai A) தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடமான வழக்கு பணியாளர் (Case worker) பணியிடங்கள் மூன்று காலியாக உள்ளது. வழக்கு பணியாளர் (Case worker) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க. (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும்,
மாத சம்பளம் என்ன.?
உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூபாய் Rs.18,000/-ஆகும்.
பணியிடத்திற்கான வழக்கு பணியாளர் (Case worker) விண்ணப்பத்தினை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 12.01.2026 அன்று 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், 8-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரியான oscnorthchennai@gmail.com மூலமாகவோ அனுப்பி என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பிக்கலாம் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.