அரசு பணியில் சேர வாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே நேரம் தமிழக அரசு பணியில் இணைய டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித்தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் ரயில்வே துறை மற்றும் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாகவும் பணியாளர்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பானது நடத்தப்படவுள்ளது. 

Continues below advertisement

ரயில்வே தேர்வு- போட்டித்தேர்வு

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரயில்வே தேர்வுவாரியத்தின் (Railway Recruitment Board) அறிவிக்கை எண்CENO1/2026ல் ALP (ASSISTANT LOCO PILOT) போட்டித்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித்தகுதியானது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் DIPLOMA அல்லது பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு ஆகும்.

இலவச பயிற்சி வகுப்பு

பணியாளர் தேர்வுவாரியத்தின் (Staff Selection Commission) அறிவிக்கை எண் HQ-C11018/1/2026 -C-1ல்SSC CGL தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 12/06/2026 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

Continues below advertisement

பயிற்சி வகுப்பில் இணைவது எப்படி.?

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

மேலும், விவரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு https://forms.gle/Ze12vKgZoRmz9PHb6 என்ற கூகுள் படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள். இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.