நாட்டின் பிரபல பொத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank Of Maharashtra) நிர்வாகம் சார்ந்த அலுவலர்கள் ( officers in Scale II and III) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்: 



  • Officers in Scale II -100

  • Officers in Scale  III - 300


மொத்த பணியிடங்கள் - 400


பணியிடம்: 


இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் இதன் தலைமை அலுவலக அமைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைமை அலுவலகத்திலும் பணியமர்த்தப்படுவர். 


கல்வி மற்றும் பிற தகுதிகள் : 



  • Officers in Scale II பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, CMA, CFA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • வங்கியில் மூன்றாண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கிரெடிட் பிரிவில் பணியாற்றியிருந்தால் சிறப்பு.

  • Officers in Scale  III பணிக்கு விண்ணப்பிக்க இதே கல்வித் தகுதி இருக்க வேண்டும். மேலும் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். வங்கி மேலாளர் அளவில் பொறுப்பு எடுத்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். 

  • இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு: 


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 25 வயது முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.  வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


ஊதிய விவரம்: 





இந்தப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆறு மாத காலம் 'Probation Period' இருக்க வேண்டும். 


Scale III  மற்றும் Scale II ஆகிய இரண்டு ஊதிய வரைவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. 




 


தேர்வு செய்யப்படும் முறை: 


இந்தப் பணிகளுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்  (Institute of Banking Personnel Selection) சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க ஆஃப் மகாராஷ்டிரா  வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.


தேர்வுப் பாடத் திட்டம்: 




தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் : 




தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இதற்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வினை எழுத முடியும். 


விண்ணப்பிக்கும் முறை: 
 
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  https://bankofmaharashtra.in/recruitment/mainpage.aspx -என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப கட்டணம் :


இதற்கு பொதுப்பிரிவினர் / ஓ.பி.சி. பிரிவினர் ஜி.எஸ்.டி. வரி ரூ.180 -யுடன் ரூ.1000 மொத்தம் ரூ.1180 ஆக செலுத்த வேண்டும்.


இதற்கு பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஜி.எஸ்.டி. வரி ரூ.18-யுடன் ரூ.100 மொத்தம் ரூ.180 ஆக செலுத்த வேண்டும்.


 பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர்,  ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். 



விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.07.2023 


முக்கிய தேதிகள்:





இது தொடர்பான அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/0069b591-be72-4327-9d6f-6ab1a597164b.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


அதிகாரப்பூர்வ இணையதள முகவரி - https://bankofmaharashtra.in/


இதற்கான நேர்காணல் நடைபெறும் விவரம் குறித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அப்டேட்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.