அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிகளில் சேர மார்ச்22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான தகுதித் தேர்வு  (AGNIVEER GENERAL DUTY (WOMEN MILITARY POLICE)) நடைபெறவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு திருமணமாகாத பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்: 

அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி 

கல்வித் தகுதி: 

  • அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு. 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 17 -1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.

ஆண்டு ஊதியம் பிடித்தம் போக கைக்குக் கிடைப்பது  வீரர்களிடம் பிடித்தம் செய்வது அரசு செலுத்துவது
முதல் ஆண்டு - ரூ.30,000  ரூ.21,000 ரூ.9000 ரூ.9000
2 ஆம் ஆண்டு- ரூ.33,000 ரூ.23,100 ரூ.9,900 ரூ.9,900
3 ஆம் ஆண்டு- ரூ.36,500 ரூ.25,580 ரூ.10,950 ரூ.10,950
4 ஆம் ஆண்டு- ரூ.40,000 ரூ.28,000 ரூ.12,000 ரூ.12,000
  மொத்தம் ரூ.5.02 லட்சம் ரூ.5.02 லட்சம்

அக்னி வீரர்களின் நிதியும், மத்திய அரசு நிதியும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் அளிக்கப்படும். 

பிற பயன்கள்

பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உளது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Computer Based Written Examination (Online CEE))
மற்றும் ஆட்சேர்ப்பு முகாம் (Recruitment Rally) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற் தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவைகளுடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் போர்ட்டல் மாற்றும் யூ.பி.ஐ. (UPI) மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 22-அன்றுடன் முடிவடைகிறது.

ஹால்டிக்கெட்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் மேலதிக தகவல் குறித்த அப்டேட்களை செக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) ( 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.03.2024

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 22.04.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு - https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ZRO_CHENNAI_NOTIFICATION_AGNIVEER_GD_WMP_24-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.