நம்முடைய காலை வேளை எப்படி அமைகிறதோ அதைப் பொருத்துதான் நம்முடைய நாளும் அமையும். காலை எழுந்ததும் முதலில் கேட்கிற பாடல் எப்படி நாள் முழுவதும் நம்மை முனுமுனுக்க வைக்கிறதோ, அதுபோலதான் நம்மை நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது இந்த ஏபிசி ஜூஸ்.


ஆப்பிள், பீட்ரூட், கேரட் இந்த மூன்றையும் கொண்டு தயாரிப்பதுதான் ஏபிசி ஜூஸ். இந்த மூன்று பொருளும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், முகம் பொழிவு பெறுவதற்கும் காலையில் அருந்துவதற்கான ஒரு சிறந்த தேர்வாக இந்த பானம் இருக்கும்.
இந்த ஏபிசி ஜூஸ் ‘மிராக்கிள் ட்ரிங்க்' என்றும் அழைக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைப்பது முதல் புற்றுநோயை உருவாக்கும் செல்களைத் தடுக்கிறது வரை இந்த ஜூஸின் பயன்கள் ஏராளம் உள்ளன. 

வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 3, பி 6, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் நியாசின், ஃபோலேட், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த இந்த பானம் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும். குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதுடன், நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைக்கவும் பயன்படுகிறது.


இது உடம்பில் சீரான ரத்த ஓட்டத்துக்கும், கொழுப்பைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் இதயம் சம்பந்தமான மாரடைப்பு போன்ற நோய்களும், நுரையீரல் பிரச்னைகளும் வராமல் தடுக்கப்படுகிறது. மூளைக்கு எனர்ஜியைத் தரும். நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும், சருமம் தொடர்பான பிரச்னைகளையும் போக்கும். கருவளையம், சருமம் சுருக்கமடைவது போன்றவற்றைத் தடுப்பதால் இளமையாக இருக்க உதவும். 
கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். இந்த ஜூஸில் கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்


காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் க நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.



செய்முறை:-
பீட்ரூட் சிறியது – 1, கேரட் -2, ஆப்பிள் – 1. இந்த மூன்றையும் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், மிக்‌ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டாமலேயே அருந்தலாம். இதனுடன் எழுமிச்சை மற்றும் புதினா சேர்த்தும் அருந்தலாம். காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலனைத் தரும்.