உங்க சுகர் கண்ட்ரோல்ல இருக்கணுமா? 10 மாவிலை போதும்!! சிம்பிளா செய்ய சூப்பர் டிப்ஸ்!

சீசன் இல்லாமல் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் இதன் இலையில் இத்தனை நன்மைகள் இருக்கும் என்று நாம் நினைத்திருக்க மாட்டோம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகு விரைவாக நன்றாகவே குறைக்கிறதாம்.

Continues below advertisement

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கசப்பான விஷயம் சர்க்கரைதான். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வது என்பது சர்க்கரை உணவில் சேர்த்துக்கொள்வதால் மட்டுமல்ல, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

Continues below advertisement

நீரிழிவு நோய்

உடலில் நமது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறினாலோ அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோதோ ஏற்படும் நிலையினால் உண்டாகும் நோய் தான் சர்க்கரை நோயாகும். இன்சுலின் என்பது உடலில் உள்ள இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும்.

இறப்புகள்

தற்போது, நீரிழிவு நோய் என்பது மனித இறப்புக்கான ஒன்பதாவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது, உலகளவில் 1.5 மில்லியன் பேர் இதனால் உயிரிழந்தாக கணக்கிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் உலகின் ஏழாவது பெரிய கொள்ளை நோயாக இது மாற வாய்ப்புள்ளது. இது தற்போது உலகளவில் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. 72.9 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். அதனால் உலகின் மிக தீவிரமான நோயாக இது மாறியுள்ளது.

மாவிலை

உலகெங்கும் பலவிதமான மருத்துவ சிகிச்சைகள் இதற்காக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும், இது மனிதர்களை விட்ட பாடில்லை. ஆங்கில மருந்து, சித்த மருந்து என எல்லாவற்றிலும் இதற்கான மருந்துகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அவையெல்லாம் அந்த அளவுக்கு வேலை செய்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் மாமரத்தின் இலை மிகவும் நல்ல முறையில் செயல்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

மா பயன்கள்

மாம்பழம் தான் பழங்களின் ராஜா. முக்கனிகளில் முக்கியமானது மாம்பழம். சம்மர் சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தில் தமிழர்கள் என்னென்னவோ உணவு செய்து சாப்பிடுகிறார்கள். மங்காயாகவும், மாம்பழமாகவும் நம் வாழ்வியலோடு இணைந்தது மாம்பழம். ஆனால் சீசன் இல்லாமல் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் இதன் இலையில் இத்தனை நன்மைகள் இருக்கும் என்று நாம் நினைத்திருக்க மாட்டோம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகு விரைவாக நன்றாகவே குறைக்கிறதாம்.

செய்முறை

அப்படி சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமென்றால் எப்படி செய்ய வேண்டும்.

  • பத்து பதினைந்து மாவிலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைக்கவும்
  • இலை முழுவதுமாக வெந்து மிருதுவானவுடன், அப்படியே விட்டு இரவு முழுவதும் குளிர விடவும்.
  • காலை எழுந்ததும் இந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
  • இந்த நீரை சில மாதங்களுக்கு குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை வெகுவாக குறையும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola