கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் ஒரு  மாதிரி அடைந்து  இருக்கிறது. இந்தியாவில் நடந்த உருமாற்றத்திற்கு டெல்டா மற்றும் டெல்டாபிளஸ் என பெயரிட பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி  எடுத்து கொள்ள வேண்டும் என  பரிந்துரைக்க பட்ட நிலையில் இப்போது பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள வேண்டும் என தகவல் வெளிவந்துள்ளது.


அதென்ன பூஸ்டர் டோஸ்?


 கொரோனா தடுப்பூசி முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்து, பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மக்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தி வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்து கொள்வதன் மூலம், கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஆண்டிபாடிகள் உடலில் உருவாகும். இந்த ஆண்டிபாடிகள் ஆனது குறிப்பிட்ட நாட்கள் தான் செயல்புரியும்.  அதன் பிறகு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மீண்டும் இது போன்ற வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அறிமுக படுத்த பட்டுள்ளது.




யாருக்கெல்லாம் இந்த பூஸ்டர் டோஸ் தேவை ?


வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டால் போதுமானது.


எவ்வளவு கால இடைவெளியில் எடுக்க வேண்டும்?


இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தாலும், ஆறு   மாத இடைவெளியில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அனுமானிக்க படுகிறது.




இஸ்ரேலில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ்கள் போட பட்டு வருகிறது. அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் போடுவதற்காக ஃபைசர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடை  பெற்று வருகிறது. இந்தியாவில் இந்த பூஸ்டர் டோஸ் எந்த நிலையில் இருக்கிறது


கோவிஷீல்டு தடுப்பூசி பூஸ்டர் எப்போது போடலாம் ?


சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவல்லா இது குறித்து சமீபத்தில் கூறுகையில், ஆறு மாத இடைவெளிக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ளலாம் என  கூறினார். பொதுவாக தடுப்பூசி எடுத்து கொண்ட ஆறு மாதங்களுக்கு பிறகு ஆண்டிபாடிகள் குறையும். அதனால் ஆறு மாத இடைவெளியில் தடுப்பூசி போட்டு  கொள்ளலாம்.


கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடுவதற்காக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த ஆராய்ச்சி தொடங்கியது, நவம்பர் மாதத்தில் இந்த முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.




இது குறித்து உலக சுகாதார நிறுவனம், கூறுகையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று சுட்டி காட்டுகிறது. அதனால் அனைவரும் , கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டு கொள்ளுங்கள். உங்கள் அருகாமையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி மையங்களில் இரண்டு தவணை தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசி ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம், கொரோனாவை வெல்ல !