Covid Strain : பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 80%.. மனிதர்களால் உருவாக்கம்.. புதிய ஒமிக்ரானால் அதிர்ந்த மருத்துவ உலகம்..

ஒமிக்ரானில் இருந்து ஸ்பைக் புரதத்தைப் பிரித்தெடுத்து, அதை மரபணு ரீதியாக கோவிட்-19-இன் திரிபுக்குள் மாற்றி இரண்டையும் சேர்த்து பலமான கோவிட் வைரஸை கண்டுபிடித்தனர் என தகவல்

Continues below advertisement

கடுமையான பாதிப்புகளை தரவல்ல, 80 சதவிகித இறப்பு விகிதம்கொண்ட கொடிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டை செயற்கையாக உருவாக்கி உள்ளனர் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதை அப்பல்கலைக்கழகம் மறுத்துள்ளது

Continues below advertisement

கோவிட்டும் ஒமிக்ரானும் இணைந்த புதிய வைரஸ்

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய, ஒமிக்ரானின் துணை வேரியண்ட் போன்றவை பரவலில் அவற்றின் தீவிரத்தன்மைக்கு வரும்போது பாதிப்பில் வலுவற்றதாக மாறுகிறது என்று கூறப்படுகிறது. மிகவும் ஆபத்தான கோவிட் வேரியண்ட்டை உருவாக்க, ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரானில் இருந்து ஸ்பைக் புரதத்தைப் பிரித்தெடுத்து, அதை மரபணு ரீதியாக கோவிட் -19 இன் திரிபுக்குள் மாற்றி இரண்டையும் சேர்த்து பலமான கோவிட் வைரஸை கண்டுபிடித்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது சீனாவின் ஊஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்டு எலிகளில் சோதனை செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில், "எலிகளில், ஓமிக்ரான் அபாயகரமான நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது, ஒமிக்ரான் S- வைரஸ் 80 சதவிகித இறப்பு விகிதத்துடன் கடுமையான நோயை உண்டாக்குகிறது" என தெரியவந்துள்ளது.

மனிதர்களுள் பாதிப்பு குறைவு

80 சதவிகித எலிகள், இந்த புதிய செயற்கை கோவிட் வேரியண்ட்டால் இறந்தாலும், மனிதர்கள் யாருக்கும் இந்த விதி பொருந்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் கண்டுபிடித்த இந்த புதிய வேரியண்ட், சாதாரண ஒமிக்ரானை விட ஐந்து மடங்கு அதிக பரவல் தன்மை கொண்ட வைரஸ் துகள்களைக் கொண்டுள்ளது என்று கூறினார்கள். இதன் மூலம், முதன் முதலில் உருவான கோவிட் -19 வைரஸ் கூட ஆய்வகத்தால் செய்யப்பட்ட தவறாக இருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்: பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம்; மருத்துவர் அறிக்கைகள் பொய்யாக இருக்காது - மதுரை உயர்நீதிமன்றம்

கோவிட்-19 ஆய்வகத்தின் தவறா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியபோது, ​​​​வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் ஆய்வாளர்களால் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்று பலர் நம்பினர். "இது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும், இது நெருப்புடன் விளையாடும் வேலை" என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் முன்னணி விஞ்ஞானி பேராசிரியர் ஷ்முவேல் ஷாபிரா கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.

கண்டுபிடித்த வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

நியூ பிரன்சுவிக்கில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியலாளர் டாக்டர் ரிச்சர்ட் எப்ரைட், "அடுத்த ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட தொற்றுநோய் பரவலை தடுக்க வேண்டுமானால், நோய்க்கிருமி ஆராய்ச்சியின் மேற்பார்வையை பலப்படுத்தப்பட வேண்டியது அவசியம். இது மிகவும் ஆபத்தானது. அவை கொடிய வைரஸ்களை உருவாக்குகின்றன" என்று கூறினார். பாஸ்டன் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ஆராய்ச்சி மற்ற நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்ட இதே போன்ற பிற ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கிறது, மேலும் அவற்றை வலுப்படுத்துகிறது. இறுதியில், இந்த ஆராய்ச்சி எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவும். இந்த கண்டுபிடிப்பால் நன்மைதான்", என்று கூறினார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola