திருவண்ணாமலை: 199 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழப்பு.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில்  இதுவரை  மாவட்டத்தில் 49 ஆயிரத்து 339 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 47ஆயிரத்து 689  பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 199 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 597  ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் ,  உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Continues below advertisement


மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது . 

தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகினறனர். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நாட்களை அதிகரித்துள்ளதால். குறைந்த அளவிலேயே செலுத்திகொள்கின்றனர்..

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement