TamilNadu Covid-19 Daily Data Tracker: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1509 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு!

மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,16,381 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 509 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1,508, வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,509 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 16 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 323 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 177  நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 177 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூரில் 186 பேரும், சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும்,  தஞ்சாவூரில் 70 பேரும்,  செங்கல்பட்டில் 99 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

கொரோனாவால் மேலும் 20  பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8386 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக  கடலூரி 4 பேரும், சென்னை, கோவை மற்றும் மயிலாடுதுறையில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,620 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,719 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,64,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 88 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 44018 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24730 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8710 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Also Read:  ‛போரையும், படையெடுப்பையும் நாடு அதிகம் பார்த்துவிட்டது; மக்கள் சகிக்க மாட்டார்கள்!’ -தலிபான்!   

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால்,  தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. 


அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement