தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1694இல் இருந்து 1,657ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக 1700 ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, இன்று இரண்டாவது நாளாக 1700க்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 190 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19  பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,509 ஆக உயர்ந்துள்ளது. 




தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5லட்சத்து 49 ஆயிரத்து 270  நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 190 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.






சென்னையில் ஏற்கெனவே 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 186 ஆக குறைந்துள்ளது. கோயம்பத்தூரில் 189 பேரும், ஈரோட்டில் 117 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும், திருப்பூரில் 84 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,509ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர் .சென்னையில் மட்டும் மொத்தம் 8467 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட 99 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,261 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,662 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,06,153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 41466 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25403 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8295 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.