தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1745இல் இருந்து 1,733 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு இதன் மூலம் இரண்டாவது நாளாக 1700ஐக் கடந்துள்ளது. சென்னையில் மேலும் 205 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27  பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது. 



தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 53 ஆயிரத்து 848ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரத்து 725 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 205 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.





சென்னையில் ஏற்கெனவே 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 205 ஆக அதிகரித்துள்ளது.. கோயம்பத்தூரில் 205 பேரும், ஈரோட்டில் 119 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும், தஞ்சையில் 61 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர் .சென்னையில் மட்டும் மொத்தம் 8461 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக செங்கல்பட்டு,கோவை மற்றும் திருச்சியில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 வயதுக்கு உட்பட்ட 122 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. மேலும் இணை நோய் இல்லாத ஒருவர் கொரோனாவால் உயிரிழிந்துள்ளார்.50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,196 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,631 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,01,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 42168 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25494 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8548 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.