தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1697இல் இருந்து 1,661 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 206 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23  பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,360 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1697இல் இருந்து 1,661 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 206 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23  பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,360 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 041 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 901 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 206 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 206 ஆக குறைந்துள்ளது.. கோயம்பத்தூரில் 211 பேரும், ஈரோட்டில் 117 பேரும், செங்கல்பட்டில் 111 பேரும், தஞ்சாவூரில் 90 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை  35,360 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்தனர்.  சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை.சென்னையில் மட்டும் மொத்தம் 8449 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகபட்சமாக தஞ்சையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,969 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,623 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,94,697 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 40629 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25016  ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8139 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


 






பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.