இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று புதிதாக  1,472  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து மேல் உள்ளது.


 






மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 624 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 241 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 026-ஆக உள்ளது.


பரிசோதனை:


தமிழ்நாட்டில் இன்று மட்டும் 25 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.67கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிய இங்கு பார்க்கவும்...