கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. கரூர் மாவட்டத்தில் நாளை 24ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 32வது தடுப்பூசி முகாம் 1677 மையங்களில் நடைபெற உள்ளது.




தமிழ்நாட்டில் கொரோனா  தொற்று முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது தினமும் தொற்று அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், கொரோனா தடுப்பூசி மருந்தே தொற்றுக்கு எதிரான முதன்மை கேடயம், இதனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் ஜூலை 24ஆம் தேதி ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அரசால் நடத்தப்பட்ட உள்ளது. மேலும், இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.




மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12- 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 - 18 வயது உடையவர்கள் போடப்பட்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா  தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த வயதுடையவர்கள் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு நிலையங்களிலேயே 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 




இதேபோல், முதல் தவணை தடுப்பூசி போட்டு இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டி நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 43,447 நபர்கள். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடைய நபர்கள் 5,68,757 கரூர் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களும் முகாமினை பயன்படுத்தி இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொரோனா  தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண