கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 58 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை 25,226 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் 13 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 186 நபர்கள் உள்ளனர். கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழப்பு இல்லை.


 




இன்று  தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.


 




நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 168 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 55,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 33 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 54,197 நபர்கள். 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X




நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு. நாமக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 522 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 497 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.


 




தமிழகத்தில் இன்று 17,934 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 4,039 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று  19 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 88,959 நபர்கள் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் 58 நபர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 168 நபர்களுக்கும் ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் . மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது பணிகளை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.