சேலம் மாவட்டத்தில் இன்று 6 பேர் கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1762 ஆக உள்ளது. மேலும் இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,25,655 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,457 ஆக உயர்வு. மாவட்டத்தில் கொரோனாவிற்கு 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு.



சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 26,813 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.


மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படாததால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முகாமில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 



தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு: 


தர்மபுரி மாவட்டத்தில் இன்று இருவருக்கு புதிதாக தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மாவட்டத்தில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 283 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 35,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,202 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் நேற்று இருவருக்கு கொரோனா பாதிப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. நோயிலிருந்து இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 370 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,663 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இருவருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.