Corona Update : திருவண்ணாமலை, வேலூர்.. இன்றைய கொரோனா நிலவரம் என்ன? விவரம் இதோ..

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதியதாக 8 நபர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் புதியதாக 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது 2023, ஆண்டில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 2 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றால் 2 நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

Continues below advertisement


 

இதுவரை மாவட்டத்தில் 68 ஆயிரத்து 743 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 67 ஆயிரத்து 995 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று கொரோனா தொற்றால் 8 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 685-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 63 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாக அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. 


 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 57 ஆயிரத்து 103 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று கொரோனா தொற்றால் 4 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 1163-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக வேலூர் மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 28 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement