புதுச்சேரி: மீண்டும் அதிகரிக்கும் எண்ணிக்கை : 49 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
சிவரஞ்சித் | 16 Aug 2021 08:17 PM (IST)
புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
கொரோனா பரிசோதனை- மாதிரிப்படம்
புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 49 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 192 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 700 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 892 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 634 (97.80 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 97.80. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார்.
முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் நேற்று 1,896 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28-ஆக பதிவாகியுள்ளது. நேற்று 24 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,911 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.