கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 16 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,917-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22363-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351. இந்நிலையில் 203 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாமில் நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. எனினும் கரூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை தடுப்பூசி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வராத நிலையில், நாளை தடுப்பூசி உண்டா, இல்லையா என்ற கேள்வியுடன் மாவட்ட மக்கள் குழப்பம். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல்லில் கொரோனா நிலவரம்




நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 51 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48049 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 64 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47079-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 461-ஆக இருக்கிறது. இந்நிலையில் 509 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், சிறப்பு மையங்கள் மூலம் போடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இரண்டு நாட்களாக தொற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கரூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு மாவட்ட மக்களும் சற்று நிம்மதியில் உள்ளனர்.


தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று , கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 28 பேர் இன்று உயிரிழப்பு. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 1,911 பேர் இன்று டிஸ்சார்ஜ். தற்போது 20,370 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.