கரூரில் இன்று புதிதாக ஐந்து பேருக்கும், நாமக்கல்லில் ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் மக்கள் சற்று நிம்மதி. மேலும், மாவட்ட மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 05 பேருக்குகொரோனா தொற்று பாதிப்பு . இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30237 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 03 பேர்கள். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சைக்காக 24 பேர்கள்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.

Continues below advertisement

 

 

கரூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 38 வது மெகா தடுப்பூசி முகாம் 1600 இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தடுப்பூசி போடவில்லை. மேலும், நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. 

 

 

நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 07 பேர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 69,683 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 06 பேர்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 69,102 பேர்கள். 

 


நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 பேர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 63 பேர்கள் மருத்துவமனையில் அனுமதி. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நநடைபெற்றது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

 


தமிழகத்தில் இன்று 522 பேர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 533 பேர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 பேர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 5496 பேர்கள் உள்ளனர். தமிழக அளவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. மேலும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதால் மாநில மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.

 

 

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola