உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.






தற்போது வேகமாக பரவி கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ரைசாவுக்கு தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து பதிவிட்டுள்ள அவர், '' இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். 


இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திகொண்ட பிறகும் கூட. கடுமையான தலைவலி, உடல் வலி, சளி, தொண்டை வலி, காய்ச்சல் என அனைத்து அறிகுறியும் எனக்கு இருந்தது. என்னை இந்த வைரஸ் எத்தனை காலம்தான் இப்படி சுற்றும் எனத் தெரியவில்லை. பாதுகாப்பாக இருங்கள். மாஸ்க் அணியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


 






முன்னதாக, சத்யராஜ், குஷ்பு, விஷ்ணு விஷால், மீனா, த்ரிஷா, அருண் விஜய், மகேஷ் பாபு, தமன், ஷெரின், ப்ரியதர்ஷன் என பல சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.