தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாத நபர்களில் சுமார் 83 சதவிகிதம் பேர் மரணமடைந்துள்ளதாக அதுகுறித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் கொரோனாவால் இறந்தவர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 2011 பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.










ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் இறந்தவர்களில் 1675 பேர் தடுப்பூசி போடவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மொத்தம் சர்வே செய்யப்பட்டவர்களில் 83 சதவிகிதம். 


முன்னதாக, தமிழ்நாட்டில் நேற்று 1,00,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  765 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 118 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 879 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.