இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.


இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன் 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 12,591 உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. நேற்றைய தினம் 5,874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென உயர்ந்து 4,282 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,000 மாக குறைந்துள்ளது.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,70,878 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,508 ல் இருந்து 5,31,547ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,015 லிருந்து 47,246 ஆக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 10,730 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 4005 பேர், தலைநகர் டெல்லியில் 3031 பேர், உத்தர பிரதேசத்தில் – 2897 பேர், தமிழ்நாடு – 2791 பேர், ஹரியானாவில் – 3830 பேர், குஜராத்தில் – 1396 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 47,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 87,083 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்று 65,000 கடந்த நிலையில் தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 3 பேர், தமிழ்நாடு, ஒடிசா, உத்திரகண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவது போல, தமிழ்நாடிலும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 509 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 2,715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.