தமிழ்நாட்டில் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 29 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 049 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 767 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,43,310 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,767 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 049 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 249 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 139 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 139 ஆக உயர்ந்துள்ளது.
Just In




கோவை 169 , ஈரோடு 132, தஞ்சை 102, சேலம் 98, செங்கல்பட்டு 95, திருப்பூர் 87, கடலூர் 70, திருவண்ணாமலை 60, திருவள்ளூர் 67, திருச்சி 59, நீலகிரி 50, நாமக்கல் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,966 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 8312 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகபட்சமாக கோவை, செங்கல்பட்டில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 22,762 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,312 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,95,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 90 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39398 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும்,25115 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7855 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )