தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெளிவர இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Continues below advertisement

இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி மீனாட்சி கூப்பிட்டு ரேவதியின் எம்டி-யை பார்த்தீங்களா என்று விசாரிக்க இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மீனாட்சி சொன்னது என்ன?

அதாவது சாமுண்டீஸ்வரி மீனாட்சியை விசாரிக்க குடும்பத்தார் அனைவரும் மீனாட்சி என்ன சொல்லப் போகிறார் என பதற்றத்தில் இருக்க, மீனாட்சி அவரை இதுவரைக்கும் பார்த்ததில்லை புதிதாக இருந்ததாக சொல்ல எல்லோரும் நிம்மதி அடைகின்றனர். 

Continues below advertisement

பிறகு அவருக்கு நன்றி சொல்ல கார்த்திக் ஐயா எல்லாம் நல்லதுக்காக தானே பண்றாரு.. ரேவதி அம்மாவும் நல்லா இருக்கணும் அதுக்காகத்தான் பொய் சொன்னேன் என சொல்கிறார். சாமுண்டீஸ்வரி எல்லாரும் ஒரே மாதிரி பதில் சொல்றாங்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என யோசிக்கிறாள். 

யார் அந்த ரெட்?

மேலும் சந்திரகலாவிடம் நீயும் வீட்ல இல்ல, நானும் வீட்ல இருக்க முடியாத மாதிரி ஆயிடுச்சு என்னமோ திட்டமிட்டு செஞ்ச மாதிரி இருக்கு நாளைக்கு ஆபீசுக்கு போயிட்டு எம் டி-ஐ பார்த்துட்டு வந்துடலாம் என சொல்கிறாள். 

மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக், ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார்? என விசாரிக்கிறான். ரெட் என்பவன் தான் இந்த கூட்டத்திற்கு தலைவன் அவனை கண்டுபிடித்தால் அனைத்து உண்மைகளும் தெரிய வந்துவிடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். 

இதைத்தொடர்ந்து ரேவதிக்கு மாப்பிள்ளை ஆக வந்திருக்கும் மருது தான் அந்த ரெட் என்ற விஷயம் தெரிய வருகிறது. அவன் தனது அடியாட்களை உஷாராக இருக்கும்படி எச்சரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.