சிம்புவிற்கு கல்யாணமா?


காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.




இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்த கேள்விக்கு, எனக்கும் எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு, அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும் , இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவர் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன்.


ஓடிடியில் வெளியாகும் யசோதா படம் 






நடிகை சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் யசோதா படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 9 முதல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை அமேசான் ப்ரைம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. 


 குட்டி கத்ரீனா கைஃப் வரப்போறாங்களா?




பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப்  கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி மீண்டும் பரவி வருகிறது. இது குறித்து கத்ரீனாவின் கணவர், விக்கி கௌஷல் தெரிவிக்கையில் அது வெறும் வதந்தி என உறுதிப்படுத்தினார்.  


“தற்போது இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் சிறிது காலம் எங்களது திருமண வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அந்த வகையில் சிறிது காலத்திற்கு இது போன்ற வதந்திகளை பரப்புவது நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அது தொடங்கிவிட்டது. ” என்று விக்கி கூறினார்.


அவதார் 2 எப்படி இருக்கு ?






அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகெங்கும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவு வருகிறது. இப்படமானது வருகிற டிசம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. தற்போது, பத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோ ஒன்று லண்டனில் திரையிடப்பட்டுள்ளது. அவதார் 2 தி வே ஓஃப் வாட்டர் படத்தை பார்த்தவர்கள், பாசிடீவான விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.



 பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் பிரபலம்






பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இத்தனை நாட்களாக காணாமல் போன மீனாவின் தங்கை, தற்போது மீண்டு கதைக்குள் கொண்டு வரப்படுகிறார். அதற்கு காரணம் முல்லையின் அக்கா மல்லியின் மகன் பிரஷாந்திற்கு மீனாவின் தங்கையை பெண் கேட்கிறார் மல்லி. இது தான் அந்த காணாமல் போன கதாபாத்திரம் மீண்டும் வருவதற்கு காரணம்.


மீனாவின் தங்கை ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்தி, கர்ப்பமான காரணத்தால் சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக பாவ்யாஸ்ரீ புது ஸ்வேதாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இன்னும் சீரியல் முடிவதற்குள் எத்தனை ரீபிளேஸ்மென்ட் நடக்க போகிறதோ தெரியவில்லை என்பது தான் விஜய் டிவி ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.   


பார்வதி நாயர் திருட்டு விழக்கு விவகாரத்தில், அவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.