இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கும் பதில் வாயிலாகவே ஒரு முரட்டுக் குத்து வைத்துள்ளார்.


யாஷிகா ஆனந்த், இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான். மாடெலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்தார்.


அதே ஆண்டு, துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் அவரைப் பெரிதாக அடையாளப் படுத்தவில்லை. இந்நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. விஜய் டிவியில் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸன் 10-ல் நடுவராக பங்கேற்றார். திரைப்படங்களில் சீரியல்களில் அப்படி இப்படி தலை காட்டினாலும் 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.




அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ள யாஷிகா தற்போது மீண்டும் சினிமாக்களில் கமிட் ஆகி வருகிறார். யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் லாஸ்லியா.
அப்படித்தான் நேற்று (மார்ச் 9 ஆம் தேதி) லாஸ்லியா கொஞ்சம் ஹாயாக ரசிகர்களுடன் சேட்டில் இணைந்தார். கேள்வி பதில் செசன் போல் போய்க்கொண்டிருந்த அந்த நிகழ்வில் நிறைய ரசிகர்களுக்கு பதிலளித்தார். பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் சளைக்காமல் நன்றி கூறினார்.


அப்போது தான் அந்த குசும்பு பிடித்த ரசிகர் யாஷிகா ஆனந்திடம், உங்களை முதன்முதலில் முழு நிர்வாண கோலத்தில் பார்த்தது யார் என்று கேட்டார். சற்றும் அசராத யாஷிகா ஆனந்த்.. டாக்டராக இருக்கும் என்று சொல்லி அந்த ஏடாகூட நபரின் வாயை அடைத்தார். லாஜிக் படி பார்த்தால் பிரசவ அறையில் நம்மை கையில் ஏந்தும் மருத்துவர் தான் நம்மை முதலில் முழு நிர்வாணமாக ஏந்தியிருப்பார். சமயோஜிதமாக யோசித்து ஸ்மார்ட்டாக பதில் சொன்ன யாஷிகா ஆனந்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மூக்குடைபட்ட ஏடாகூட நபர் அதற்குப் பின்னர் எங்கே போனார் என்று தெரியவில்லை.