இது குறித்து யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும் போது, “ நீ மனித உருவில் சூரிய ஒளியாய் இருந்தாய். பல ஆண்டுகளாக உன்னுடன் பழகியதற்கு நான் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். இன்று உனக்கு பிறந்தநாள். நீ இனி இங்கு இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் எனது இதயம் உடைந்து நிற்கிறது.


இதற்கு காரணமான அனைத்திற்கும் நான் மிகவும் வருந்துகிறேன். உன்னுடைய சிரிப்பை மிஸ் செய்கிறேன். இந்த நேரம் உன்னை அழைத்து உன்னுடைய அழகான முகத்தை பார்த்திருப்பேன். நீ அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த போது, நமக்குள் நடந்த உரையாடல்கள், உனது அழகிய முகம், உனது குழந்தைத்தனமான பேச்சு என எல்லாவற்றையும்  மிஸ் செய்கிறேன். எனது வாழ்கையில் உன்னை நம்பிய அளவுக்கு, வேறு யாரையாவது நம்பி இருக்கின்றேனா என்று எனக்கு தெரியவில்லை.


 






10 வகுப்பு தேர்வின் போது எனக்கு புத்தி சொன்னாய். எனது வாழ்கையின் தூண் நீ. என்னுடைய வாழ்கையில், என்னை பயன்படுத்தி கொண்டவர்கள், போலியாக இருந்தவர்கள், பல வழிகளில் எனக்கு துரோகம் செய்தவர்கள் மத்தியில் நீ ஒரு உண்மையானவளாக இருந்தாய். நமக்குள் ஒரு முறை கூட சண்டை வந்ததில்லை. நீ இப்போது மேலே வானத்தில் நட்சத்திரமாக இருக்கிறாய். என்னை வழிநடத்துகிறாய்.


உனது ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்ற விரும்புகிறேன். நீ இல்லாமல் உனது குடும்பம் தவிக்கும் வேதனையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 16 வயதில் இருந்து நான் ஒரு பெண்ணாக உருமாறியது வரை நீ என்னை பார்த்து வந்திருக்கிறாய். என்னிடம் ஒன்றுமில்லாத காதலத்தில் இருந்து நீ என்னுடன் இருந்திருக்கிறாய். ஹேப்பி பர்த்டே Scooby Dooby. விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.


முன்னதாக, யாஷிகா ஆனந்த ஓட்டி வந்த காரானது மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழியான ஷெட்டி பவனி உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சைகள் நடந்தன. தற்போது உடல்நலம் தேறி, படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.