குஷ்பு வெளியிட்ட புகைப்படம்:


கடந்த ஆண்டு இறுதியில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதாவது குழந்தைகள் பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல்நலம் கருதி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் ஆகிவை பெண்களின் உடலை அடியோடு மாற்றிவிடுகின்றன. இதில் நடிகைகள் மட்டும் விதி விலக்கல்ல . இப்படித்தான் நடிகை குஷ்புவும் முன்பு இருந்ததை காட்டிலும் கூடுதலாக உடல் எடை அதிகரித்திருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர் வெளியிட்டிருந்த சூப்பர் ஸ்லிம் புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலரும் சின்னத்தம்பி குஷ்பு போலவே மாறிட்டீங்க என கமெண்ட்ஸை தெறிக்கவிட்டனர். அந்த புகைப்படத்துடன் உடல்நலம் குறித்தான அறிவுரைகளையும் குஷ்பு வழங்கியிருந்தார்.






உடல் எடை அதிகரிக்க காரணம் இதுதான் :



இந்த புகைப்படம் வெளியானதற்கு பிறகு பலரும் குஷ்பு சின்னத்தம்பி படத்தின் இரண்டாவது பாகத்திற்கு தயாராகி வருவதாக கிசு கிசுக்க தொடங்கினர்.ஏனென்றால் அந்த சமயத்தில்தான் நடிகர் பிரபுவும் உடல் எடையை குறைத்திருந்தார். ஆனால் தான் கம்பேக் எல்லாம் கொடுக்கவில்லை . எனது உடல் எடையை குறைக்க இதுதான் காரணம் என குஷ்புவே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “ நான் உடல் எடையை குறைக்க காரணம் எனது குழந்தைகள்தான். அவங்க இருவரும் அதிக அளவிலாம உடல் எடையை குறைத்திருக்கிறார்கள். அதே போல எனது கணவர் காவல்துறை அதிகாரியாக பல படங்களில் நடிக்கிறார். அதனால் அவரும் உடல் எடையில் அதிக கவனம் செலுத்துகிறார். மூன்று பேருமே என்னை விட உயரமானவர்கள். அவங்க முன்னால நான் குண்டாக இருந்தால் இன்னும் குள்ளமாக தெரிவேன். ஒரு குடும்ப புகைப்படம் எடுத்தால் நான் மட்டும் அதில் வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதற்காகத்தான் உடல் எடை குறைத்தேனே தவிர கம்பேக் ஐடியாவெல்லாம் கிடையாது. பசங்களுக்காகத்தான் சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். “ என்றார் குஷ்பு .