விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் நாயகியான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் வி.ஜே.சித்ரா. வி.ஜே.வாக சின்னத்திரையில் அசத்திய சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த சூழலில், நடிகை வி.ஜே.சித்ரா கடந்தாண்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உடற்கூராய்வு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


தற்போது, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சித்ராவின் கணவர் ஹேமந்த்தும், ஹேமந்தின் நண்பரான இமானுவேலும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சித்ராவிற்கு பலருடன் தொடர்பு இருப்பதுபோல எழுந்த குற்றச்சாட்டு அவரது குடும்பத்தாரை மிகவும் வேதனை அடையவைத்துள்ளது.


இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சித்ராவின் பெற்றோர் மிகவும் வேதனையுடன் கூறியிருப்பதாவது,


“சித்ரா பற்றி மேலும் மேலும் வெளியாகும் தகவல்கள் தவறானவை. இந்த தவறான தகவல்களால் தாங்கள் மேலும், மேலும் உடைந்து போகிறோம். எங்களின் மகள் பற்றி எங்களுக்கு தெரியும். எங்கள் மகள் ஒன்றும் அப்படிப்பட்ட பெண் அல்ல. எங்கள் மகள் உயிருடன் இல்லை என்ற துணிச்சலில் எங்கள் மகள் பற்றி தவறாக பேசுகிறார்கள். சித்ரா இருந்திருந்தால் இப்படி பேசுவார்களா? எங்கள் மகள் பற்றி வரும் தவறான செய்திகளைப் பார்க்கும்போது வயிறு எரிகிறது. எங்கள் மகள் பற்றி தவறாக பேச வேண்டாம்.” என்று ஆதங்கத்துடனும், வேதனையுடன் கண்ணீருடன் பேசியுள்ளனர். 


சித்ரா மரணத்தில் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், ஒரு மாபியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேமந்த் கூறினார். மேலும், ஹேமந்தின் நண்பர் இமானுவேல் சித்ராவின் அறையிலும், அவரது கணவர் ஹேமந்தின் அறையிலும் ஏராளமான ஆணுறைகள் இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.




அதேசமயத்தில், விஜே சித்ராவின் நெருங்கிய தோழி நடிகை ரேகா நாயர் ஹேமந்த் மிகவும் மோசமானவர், அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு தற்போது சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஹேமந்த் பல பெண்களை நிர்வாணமாக புகைப்படங்களை அனுப்பச் சொல்லி கட்டாயப்படுத்துவார் என்றும் ரேகா நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.