சோசியல் மீடியாவில் கவனம் ஈர்ப்பதற்காக நிர்வாண போட்டோவை பகிரவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.


நிர்வாண போட்டோ குறித்து பேசியிருக்கும் விஷ்ணு விஷால், “முதலில் நான் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். அது போட்டோஷூட் அல்ல. நானும் ஜூவாலா கட்டாவும் எழுந்த போது, ஜூவாலா எனது உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அவரது போனில் அந்த போட்டோவை எடுத்தார். நான் இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிரவா வேண்டாமா என யோசித்த போது, என்னுடைய மனைவிதான் லிகர் படத்தில் இருந்து விஜய்தேவரகொண்டா பகிர்ந்த புகைப்படம், ரன்வீர் சிங் எடுத்த புகைப்படம் உள்ளிட்டவற்றை பற்றி பேசி, இதை பகிர்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றார். 


 






நான் அந்த போட்டோவை பகிர்ந்ததற்கு காரணம், இந்த உடலுக்காக நான் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன் என்பதை காட்டவே.. எனக்கும் என்னை பற்றி, என்னுடைய படங்கள், அதில் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு பார்வையை மக்கள் என் மீது வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் இருந்தது. என் மனையும் அதையே சொன்னாள். அதை உடைத்து நான் எல்லாத்துக்கும் பொருந்துபவன் என்று காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதை ஏதோ சோசியல் மீடியாவில் கவனம் ஈர்க்க வேண்டுமென்று நான் பதிவிடவில்லை. நான் தற்போது எனது சினிமா வாழ்கையின் சிறந்த காலக்கட்டத்தில் இருக்கிறேன்” என்றார். 


 






முன்னதாக, சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்தார். இந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் வைரலானதை தொடர்ந்து, அவரது மீது தனியார் தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே  நடிகர் விஷ்ணு விஷாலும் தனது மனைவி எடுத்த நிர்வாண போட்டோவை பகிர்ந்தார். இதனை பலரும் கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறார் என்று விமர்சனங்களை அடுக்கிய நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 


Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!