தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் மிகவும் அர்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் சிலர் நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.விக்ரம் மற்றும் அவரது மகன் இருவருக்குமான நெருக்கம் அப்பா- மகன் என்பதை தாண்டி நண்பர்களை போன்றது. இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை கண்டு கோலிவுட்டே வியந்திருகிறது. துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்னும் ரீமேக் திரைப்படத்தில் அறிமுமானார்.படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் , துருவ் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அப்பா மகன் காம்போவின் மாகன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் . இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார்  தயாரித்துவருகிறார், படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






 



மகான்  திரைப்படத்தில் விகரம் மாஸ் கலந்த  நெகட்டிவ் ஷேட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. துருவ் சீனாவின் தற்காப்பு கலைகள் அறிந்த காவல்துறை அதிகாரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட்லுக் , பாடல் மற்றும் சில புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தில் டப்பிங் வேலைகள் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிவிப்பை துருவ் விக்ரம் , கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். 







மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். படத்தில் ஏகப்பட்ட சஸ்பெண்ட் எலெமண்ட்ஸை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர்.இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. படம் வருகிற பொங்கல் பண்டிகையை குறி வைத்து ஓடிடியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.