தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பான் இந்திய நடிகராக கலக்கி வருகிறார். ஒரு நடிகருக்கான ஸ்டீரியோ டைப் பார்முலாவை தகர்த்தெறிந்து சிறப்பான நடிப்பு மட்டுமே போதும் என்பதை நிரூபித்தவர். ஹீரோ கதாபாத்திரம் மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்கும் ஒரு சில நடிகர்கள் இருக்கும் இந்த சினிமாவில் வில்லன், மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். 



 


தோற்றத்துக்கு முக்கியத்துவம் காட்டாத நடிகர் :


ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி பின்னர் ஹீரோவாக அறிமுகமான பிறகும் ஒரு ஹீரோக்கான கெத்துடன் இல்லாமல் சாமானிய மனிதன் போலவே வலம் வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி பின்னர் உடல் எடையை அதிகரித்து, சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் காணப்பட்டார். தாடி மீசை என கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் தனது தோற்றத்தை மாற்றி நடித்து வந்த விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டிஎஸ்பி'. 


ஏமாற்றமே மிஞ்சியது :


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'டிஎஸ்பி' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது. விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்த சேதுபதி திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அதே போன்ற வெற்றியை இப்படத்திலும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 







ஸ்லிம்மான நியூ லுக் :


மிகவும் பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதி தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பார்த்து மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளார்கள் அவரின் ரசிகர்கள். விஜய் சேதுபதி தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்போது ஸ்லிம் லுக்கில் இருக்கிறார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற போஸ்ட் அது. விஜய் சேதுபதியின், அடுத்த திரைப்படத்திற்காக இந்த லுக் என்பது ரசிகர்களின் யூகம். 


பேச்சுக்கள் பொய்யாய் போனதே :


விஜய் சேதுபதி சமீபகாலமாக வெயிட் போட்டு இருந்ததால் அவர் இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடிக்க முடியும் என சில பேச்சுக்கள் அடிபட்டன. தற்போது அவரின் இந்த ஸ்லிம் லுக்கை பார்த்தவர்கள் வாய் அடைத்து போய்விட்டார்கள். இந்த புகைப்படம்  தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.