Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


நடிகை ராதிகா பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். அந்த வகையில் தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


கடந்த வாரத்தில் சாமியப்பன் - சிவகாமி தம்பதியினர் தங்களுடைய வளர்ப்பு மகளான ரேணு, தயாளன் குடும்பத்தால் அவமதிக்கப்படுவதை கண்டு கொதித்தெழுந்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாத்தில் உறவு முறிந்தது. அதேசமயம் தயாளனின் மகன் அர்ஜூன், தன் காதலியான ரேணுவிடம் சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இந்த சீரியலில் இன்று நடக்கவிருப்பதை காணலாம். 


இன்றைய எபிசோட் அப்டேட்


ரேணு, தயாளன் தன்னை அவமானப்படுத்தியதை எண்ணி சாப்பிடாமல் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள். இதனைப் பார்க்கும் ஷண்முகம் அவரை தேற்ற முற்பட, பின்னணியில் வழக்கம்போல சினிமா பாட்டை ஓட விட்டு வெறுப்பேற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து ரேணு, அண்ணன் குழந்தையிடம் போனை விளையாட கொடுக்கிறாள். அப்போது அர்ஜூனிடம் இருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கு, ரேணு எடுக்காமல் கட் செய்து விடுகிறாள். 


இதனைத் தொடர்ந்து அடுத்த காட்சியில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்க, சாமியப்பன் மறுபடியும் ரேணு கல்யாணம் பற்றி பேச தொடங்குகிறார். ஆனால் தனக்கு கல்யாணம் வேண்டாம்ய், வேலைக்கு செல்கிறேன் என சொல்கிறார். படிக்குமாறு அனைவரும் ரேணுவை சொல்கின்றனர். முதலில் மறுக்கும் அவர், அப்பா சாமியப்பனுக்கு கஷ்டம் இல்லை என்றால் படிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதைக்கேட்டு ரேணு அண்ணன் நடேசன் டென்ஷனாகிறார். 



இப்ப அவளுக்கு எதுக்கு படிப்பு என கேட்டு கோபப்படுகிறார். அதேசமயம், நடேசனின் மகள் தன் உண்டியல் காசை எடுத்து கொடுத்து ரேணுவை படிக்குமாறு சொல்கிறார். இதன்பின்னர் கோயிலில் ரேணுவை அர்ஜூன் சந்திக்கிறார். திருமணம் செய்வது பற்றி பேசுகிறார். ஆனால் இந்த விஷயத்தில் என் அப்பா தான் முடிவெடுக்க வேண்டும். குடும்ப உறவு முறிந்த பிறகு எப்படி நான் திருமணம் செய்வது என கேட்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.