வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகுசுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.
படத்தில் ஃபகத் பாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில் தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக தற்பொழுது விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக நாயகன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி திரையில் இந்த ஜாம்பவான்களின் நடிப்பைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் .