தமிழ் சினிமா என்று இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து மிகவும் பிஸியாக வலம் வரும் ஒரு நடிகர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என பல நடிகர்களும் தங்களது வயதையும் மீறி பிடிவாதமாக நடிக்கும் இந்த காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். ஹீரோ ரோல்களை காட்டிலும் அவர் தற்போது மல்டி ஸ்டாரர் படங்கள், நெகடிவ் கதாபாத்திரங்கள், கெஸ்ட் ரோல் என தன்னுடைய வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்தி இன்று எட்டாத ஒரு இடத்தில் மிகவும் பிஸியாக ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். .



பாலிவுட்டில் விஜய் சேதுபதி:


விஜய் சேதுபதி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் மூலம்  பாலிவுட்டில் என்ட்ரியாக உள்ளார். அது மட்டுமின்றி ஏராளமான இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். சென்னையில் இருப்பதை காட்டிலும் மும்பையில்தான் அதிகமான நாட்கள் வசித்து வருகிறார். ஏராளமான திரைப்படங்களில் பல்வேறு ரோல்களில் நடித்து வருகிறார். 


சினிமா இல்லை என்றால் :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதியுடன் நீங்கள் சினிமாவுக்கு வரவில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி கொடுத்த பதில் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி என்ன சொல்லிவிட்டார் என்பதுதானே உங்களுடைய கேள்வி. அவர் பேசுகையில் " முன்னர் என்  மனைவி குழந்தைகளோடு கீழ்ப்பாக்கத்தில் ஈகா தியேட்டர் அருகேதான் வசித்து வந்தேன். ஒரு நாள் எனது மகளுடன் சென்று கொண்டு இருக்கும்போது எங்களுக்கு முன்னர் ஸ்விக்கியில் டெலிவரி செய்யும் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். நான் சினிமாவில் இந்த நிலைக்கு வரவில்லை என்றால் இந்த ஸ்விக்கி அங்கிள் போல டெலிவரி பண்ணிட்டு இருந்து இருப்பேன் என எனது மகளிடம் கூறினேன். ஏன் என்றால் எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவ்வளவுதானே ஒழிய வேறு ஏதாவது செய்து இருப்பேன் என தோணவில்லை. பிசினஸ் பண்ண ட்ரை பண்ணேன் ஆன ஃபிளாப் ஆனது அதனால் அப்படியே விட்டுட்டேன். அவ்வளவுதான்" என மிகவும் சாதாரணமாக பதிலளித்தார். 


சூது கவ்வும் 2 :


கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற திரைப்படம் 'சூது கவ்வும்'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. சி.வி. குமார் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ். அர்ஜுன் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார் என்றும் அதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.