நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது என்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ இந்தக் கமெண்டை சொல்லவே கூடாது. உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் அவர்களை கமிட் செய்யவே போவதில்லை.






விளம்பரத்திற்காக பேசுகிறார்கள்


இது போகுற போக்கில் விளம்பரத்திற்காக பேசுவது. அது அந்தக்கணக்கில் வராது. நடிகர்கள் ஒரு கணக்கு போட்டு ஒரு சம்பளத்தை கேட்கிறார்கள். உங்களால் அதை தர முடியவில்லை என்றால் வேறு நடிகரிடம் செல்லப்போகிறீர்கள். இதே போல நான்கு பேர் சென்று விட்டால், அந்த நடிகர் தானாக தனது சம்பளத்தை குறைத்து விட போகிறார். சம்பளம் என்பது நடிகர்களின் விருப்பம். இந்த எண்ணங்களை முதலில் விதைப்பதே தவறு. அது குட்டி வேறு போடுகிறது.” என்று பேசியுள்ளார். 


தகவல் உதவி:


 



நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரது நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.