மலையாள சினிமா உலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலையாளத்தில் இவர் நடித்த கம்மாட்டி பாடம் உள்ளிட்ட படங்களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் ரசிகர்கள்.


இவர் தற்போது ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘குரூப்’. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாறன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் துல்கருடன் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.


 






1984 ஆம் ஆண்டு முதல் கேரள காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் சுகுமாறா குரூப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் நேற்று (நவ.13) திரையரங்குகளில் வெளியானது.


இந்நிலையில் இப்படம் தொடர்பான விளம்பரப் பணிகளில் துல்கர் சல்மான் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள துல்கர், ''விஜய் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர். அவரது நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.


துல்கர் சல்மான் தற்போது நடன இயக்குநர் பிருந்தா இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க:கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது


பேரிடர் நிவாரண நிதி எங்கே? அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி!