வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படம் குறித்து நடிகர் சூரி முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக  வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 






 சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது. படத்திற்காக சூரி செய்யும் கடுமையான வொர்க் அவுட் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதியும், சூரியும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். 






இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விடுதலைப் படம் குறித்து நடிகர் சூரி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சூரியின் அம்மன் உணவக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார். 




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி விடுதலை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். விடுதலை படத்தில் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் உள்ளதால்  தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. விடுதலைப் படம் மக்களை சிந்திக்க வைத்து மிகப்பெரிய வெற்றி பெறும்.படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண