தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள புஷ்பா படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ள படக்குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகை சமந்தா ஒரு குத்து பாடலுக்கும் நடனமாடியுள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் படத்தின் சாமி சாமி பாடல் ,ஒ சொல்றியா மாமா  உள்ளிட்ட பாடல்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர். குறிப்பாக சாமி சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் மாறுபட்ட நடனம் பலரை கவர்ந்துள்ளது. பலரின் இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவை போலவே நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வரும் சூழலில் , அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாடலுக்கு நடனமாடி பதிவேற்றியுள்ளார். டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட்டில் கிளாமராக நடனமாடிய ராஷ்மிகாவின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.







செம்மரக்கடத்தலை அடிப்படையாக கொண்டு உருவாகும் பாத்தில் , மிரட்டும் காவல் அதிகாரியாகவும்ன் , அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகவும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் , மல்லுவுட் ஸ்டார் ஃபஹத் பாசில் . புஷ்பா படத்தின் அனைத்து மொழி தியேட்டர் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட நிலையில் , தற்போது OTT பிளாட்ஃபார்முக்கான வெளியீட்டு உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று புஷ்பா படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சில அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. ஆடியோ , சாட்டிலைட் என புஷ்பா படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புஷ்பா படம் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என கூறப்படும் நிலையில் , படம் வெளியாவதற்கு முன்னதாகவே அது 250 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது படக்குழுவினரை குஷியில் ஆழ்த்தியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.