Just In





அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த காமெடி நடிகர்; கேரவனில் சம்பவம் செய்த 49 வயது நடிகை ஓப்பன் டாக்!
தன்னை காமெடி நடிகர் ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்ததாகவும், தான் கேரவனுக்கு வர சொன்னதாகவும் நடிகை பிரபல நடிகை பிரகதி கூறியுள்ளார்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை பிரகதி, தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 'வீட்ல விசேஷங்க' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகம், ஜெயம், கெத்து, பகீரா, எத்தன், சிலம்பாட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 49 வயதை எட்டியுள்ள இவர், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசியிருக்கிறார். அதில், ஒரு காமெடி நடிகர் படப்பிடிப்பில் தன்னிடம் சிக்னல் காட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். அப்போது நான் அவர் மீது கோவம் கொள்ளவில்லை.

நான் ஏதாவது பேசியிருந்தால் படப்பிடிப்பு நின்று போயிருக்கும். அதனால், நாம் ஷூட்டிங் முடிந்த பிறகு எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என அவரிடம் கூறினேன். மேலும் படிப்பிடிப்பு முடிந்த பின்னர் அந்த நடிகரை கேரவனுக்கு வர சொன்னேன்.
கேரவனுக்கு வந்த அவரிடம் நான் உங்களிடம் ஏதேனும் சிக்னல் கொடுத்தேனா அல்லது வேறு ஏதேனும் தவறாக நடந்து கொண்டேனா என்பது குறித்து கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். மேலும், நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது தவறு. நான் படப்பிடிப்பில் ஏதேனும் உங்களிடம் பேசியிருந்தால் அது உங்களுக்கு தவறாக புரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
அப்படி எதுவும் நடக்காதபோது ஏன் இவ்வளவு கீழ்த்தனமா நடந்து கொள்கிறீர்கள். இது உங்களுக்கே ஆசைங்கமாக இல்லையா? இப்போது உங்களிடம் இதை மரியாதையுடன் சொல்கிறேன். என கூலாக டீல் செய்தாராம்.