‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வாழ்த்தி  நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட் ஒன்றை பதிவிட்டு  இருக்கிறார். 


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.


இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


 






இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கௌதம் மேனன் - எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை கௌதம் மேனன் விரிவாக்கம் செய்து திரைப்படமாக உருவாக்கியுள்ளார். 


 






ஜெயமோகன் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வெந்து தணிந்தது காடு நீளமான படமாக இருக்கும். இது ஒரு முழு வாழ்க்கை கதையாகும். படம் மெதுவாகத் தான் செல்லும். ட்ரெய்லரின் வன்முறை காட்சிகள் இருப்பதைப் பார்த்து ஆக்‌ஷன் படம் என நினைக்காதீர்கள். இந்த படம் இப்போது உயிரோடு இருக்ககூடிய ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு தான் என படக்குழு தெரிவித்துள்ளது.  மக்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 






இந்த நிலையில் இந்தப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ட்விட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த ட்விட்டில், “ நான் மதிக்கக்கூடிய பலர் இந்தக்குழுவில் இருக்கிறார்கள். இந்தப்படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை.. வாழ்த்துகள் தோழர்களே” என்று பதிவிட்டு இருக்கிறார்.